Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (19:16 IST)
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் வீட்டிலேயே துப்பாக்கி தயாரிப்பது தெரிய வந்தது
 
இந்த நிலையில் அந்த இரண்டு இளைஞர்களிடம் போலீசார் அவ்வப்போது விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது லாரியில் வெடிகுண்டு வைப்பதற்காக தயாரிப்பதாகவும் முக்கிய தலைவர்களை கொல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக அதற்காகவே துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தயாரிப்பதாகவும் அவர்கள் விசாரணையில் கூறியுள்ளனர்
 
இந்த நிலையில் இந்த இரண்டு இளைஞர்களையும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments