Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கும் வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. திருவள்ளூரில் சிறுவன் பலி..!

Mahendran
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (14:09 IST)
தமிழகத்திற்கு வராது என்று கூறப்பட்ட ஜிபிஎஸ் நோய் தற்போது திருவள்ளுவரை தேர்ந்த சிறுவனை தாக்கிய நிலையில், அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம்,  உள்பட சில மாநிலங்களில் ஜிபிஎஸ் நோய்த்தொற்று பரவி வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் ஒரு மாவட்டம் முழுவதுமே இந்த நோய் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
 இந்த நிலையில், இந்த நோய் பாதித்து திருவள்ளுவரை சேர்ந்த சிறுவன், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிர் இழந்து விட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பொதுவாக இந்த நோய் குடிநீர் மூலம் பரவுவதாக கூறப்பட்டாலும், புதிதாக கண்டறிந்த நோயாளிகளுக்கு குடிநீர் மூலமாக பரவியிருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. இருப்பினும், கொதிக்க வைத்த நீர் மற்றும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடும் படி பொது மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்தை ஓட்டிய படி ரீல்ஸ்.. சென்னையில் டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்..!

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில்! யாரெல்லாம் பங்கேற்கலாம்?

இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா? ராணுவ விமானத்தில் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்? பரபரப்பு தகவல்!

பெங்களூரில் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1.61 லட்சம் அபராதம் - பரபரப்பு தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments