Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது அலை வந்தாலும், வராவிட்டாலும் முன்னெச்சரிக்கை வேண்டும் - தமிழிசை!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:23 IST)
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா 3 வது அலை குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்க மக்களுக்கு அறிவுறுத்தல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இதனிடையே 3 ஆம் அலை எச்சரிக்கைக்கும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா 3 வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
 
கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், வராவிட்டாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலர் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments