Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டார் ஆளுநர் ரவி: அமைச்சர் ரகுபதி

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (11:55 IST)
10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டார் ஆளுநர் ரவி என அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
சட்டமன்றத்தில் 2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநர் ரவி மறுத்துவிட்டதாகவும், சட்டப்படி 2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்றும், ஆனால் 2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு  ஆளுநர் அனுப்பியது தவறு  என்றும்  அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 
மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிர்வாகம் முடக்கப்பட்டிருப்பதாகவும்,  
தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்பப் பெறுவதுதான் ஒரே தீர்வு என்றும் அமைச்சர் ரகுபதி
கூறியுள்ளார்.
 
சமீபத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடிய போது  கவர்னர் திருப்பி அனுப்பிய அனைத்து மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தர மாட்டார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதன்படியே அவர் அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments