Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (09:26 IST)
துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
 
மேலும் உயர்கல்வித் துறை செயலருக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் எந்த பங்கும் இல்லை என்றும், துணை வேந்தர் தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது என்றும்  ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை
வெளியிட்டுள்ளார்.
 
மேலும் பல்கலைகழக விவகாரங்களில் உயர்கல்வித் துறைக்கு எந்த பங்கும் இல்லை. எனவே, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி  கேட்டுகொண்டுள்ளார் 
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைபிடிக்காமல், அதனை மீறும் வகையில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், யூஜிசி பரிந்துரைகளை தவிர்த்து தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவின் அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பு யூஜிசி விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது என்றும் கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments