Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (09:26 IST)
துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
 
மேலும் உயர்கல்வித் துறை செயலருக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் எந்த பங்கும் இல்லை என்றும், துணை வேந்தர் தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது என்றும்  ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை
வெளியிட்டுள்ளார்.
 
மேலும் பல்கலைகழக விவகாரங்களில் உயர்கல்வித் துறைக்கு எந்த பங்கும் இல்லை. எனவே, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி  கேட்டுகொண்டுள்ளார் 
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைபிடிக்காமல், அதனை மீறும் வகையில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், யூஜிசி பரிந்துரைகளை தவிர்த்து தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவின் அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பு யூஜிசி விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது என்றும் கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments