Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திரபாபு.. கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுனர் ரவி..!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (09:25 IST)
டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் கோப்புகளை தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவுக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புகள் தயார் செய்து ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டு உள்ளார் என்று தகவல் நேற்று வெளியானது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுனர் ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிகிறது
 
இந்த பதவியில் உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றும் ஆனால் சைலேந்திரபாபு 61 வயது ஆகிவிட்டது என்றும் எனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை இந்த நியமனத்தில் பின்பற்றப்படவில்லை என்றும் ஆளுனர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments