Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து முதல்வருக்கு ஆளுநர் கடிதம்: நீக்கத்திற்கான காரணம் குறித்து விளக்கம்..!

செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து முதல்வருக்கு ஆளுநர் கடிதம்: நீக்கத்திற்கான காரணம் குறித்து விளக்கம்..!
, வெள்ளி, 30 ஜூன் 2023 (08:59 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அமலாக்கத் துறையின் கைதுக்கு பிறகும் நீடிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு அதிரடியாக ஆளுநர் ரவி, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். 
 
இந்த உத்தரவு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு கவர்னருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என்று முதல்வர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
கரூரில் நடந்த ஐடி சோதனையின் போது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதமே விசாரணை தடுப்புக்கு உதாரணம். ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களும் பறிக்கப்பட்டன
 
அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் நீக்கத்திற்கான காரணம் குறித்து இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்னருக்கு ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய அதிகாரம் உள்ளது: எச் ராஜா ட்வீட்..!