Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு
, செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (15:46 IST)
அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


 

 
சசிகாலா எதிராக தீர்ப்பு வந்த பின்னர் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக  இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 
 
இந்நிலையில் ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் சசிகலாவால் முதல்வராக பதவி ஏற்க முடியாமல் போனது. இதையடுத்து அதிமுக சார்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
எடப்பாடி பழனிச்சாமி 12 அமைச்சர்களுடன் ஆளுநரை சந்திக்க உள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூவத்தூரில் அடித்து உதைக்கப்பட்ட அமைச்சர்?