Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குடியரசு தினவிழா: கவர்னர் கொடியேற்றினார்

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (08:30 IST)
இந்தியா முழுவதும் இன்று 71வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று காலை சென்னையில் குடியரசு தின விழாவையொட்டி மெரினாவில் மூவர்ண கொடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கலந்து கொண்டார். மேலும் சென்னை மெரினா காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். 
 
முன்னதாக குடியரசு தினவிழாவை ஒட்டி நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை என நவீன இந்தியாவின் மூன்று முக்கிய அங்கங்கள், ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவை என்றார். அடிப்படையில் மக்கள் தான் குடியரசை வழிநடத்தி செல்கிறார்கள் என்றும், எதிர்காலத்தை முடிவு செய்வதற்கான உண்மையான அதிகாரம் மக்களிடமே இருக்கிறது என்று கூறினார்.
 
மேலும் காந்தியின் உண்மை மற்றும் அஹிம்சையை தினசரி வாழ்க்கையில் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசுத் தலைவர், நல்ல விஷயத்திற்காக போராடும் போது வன்முறையில் ஈடுபடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அரசியலமைப்பு சட்டம் குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்கியிருக்கிறது என்றும், அதே சமயம் ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை பேணும் வகையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments