Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவேரி மருத்துவமனையில் கவர்னர்: கருணாநிதியின் உடல்நலம் கேட்டறிந்தார்

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (10:32 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று நள்ளிரவில் திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் அவர் இரவு 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் 20 நிமிடங்கள் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின்னர் அவரது ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடமும் அதன் பின்னர் மு.க.ஸ்டாலினிடமும் கருணாநிதி உடல்நலம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கேட்டறிந்தார்.
 
மேலும் இன்னும் சில மணி நேரத்தில் இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களும் சென்னை வரவுள்ளதாகவும், அவரும் காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியை சந்திக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments