Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (20:38 IST)
தமிழகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் சொந்த வீடு கட்டித்தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்
 
தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் வரவிருப்பதால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி ஆச்சர்யமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே விவசாயிகளின் பயிர்க் கடன்கள் ரத்து, வழக்குகள் ரத்து உள்பட பல அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் தற்போது சொந்த வீடு அனைவருக்கும் கட்டித்தரப்படும் என்ற உறுதிமொழியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்
 
இன்று அவர் தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய போது ’சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் நிலம் வாங்கி இலவசமாக காங்கிரட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சொந்த வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை கொண்டு வர வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments