Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி !

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (19:52 IST)
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நேற்று மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்கம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது.

அதில்,  குழந்தைகளுக்கான இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009ன்படி 2021-22 ஆம் ஆண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் நலிவடைந்த பிரிவினர்களின் குழந்தைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு  சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வருவதால் வரும் ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரைஉ rte.tnschool.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை பெறப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரங்கள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி மாலையில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments