புனித வெள்ளி.. தொடர் விடுமுறை! படையெடுக்கும் மக்கள்! - சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (10:38 IST)

இன்று புனித வெள்ளி கொண்டாடப்படும் நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறையாகவும் இருப்பதால் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

கிறிஸ்தவர்களின் புனித நாளான புனித வெள்ளி இன்று கொண்டாடப்படும் நிலையில் அடுத்தடுத்து ஈஸ்டர் சண்டே உள்ளிட்ட பண்டிகைகளும் நடைபெறுகின்றன. இந்த சமயத்தில் மக்கள் பலரும் வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளிட்ட பல சர்ச்களுக்கு செல்வது அதிகமாக உள்ளது.

 

இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கும்பகோணம் கோட்டத்தில் புனிதவெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறையை கருத்தில் கொண்டு இன்று ஏப்ரல் 18 முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 625 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி என பல பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கும் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments