Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர் ஏறுமுகத்தில் தங்கம்: இன்று ரூ.41,424க்கு விற்பனை!!!

தொடர் ஏறுமுகத்தில் தங்கம்: இன்று ரூ.41,424க்கு விற்பனை!!!
, சனி, 1 ஆகஸ்ட் 2020 (11:52 IST)
நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் தங்கம் விலை தற்போது ரூ.41,424-க்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.41,000க்கு விற்பனை ஆனது. வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஆனால், நேற்றியை விட இன்று இதன் விலை உயர்ந்து அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,424க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமிற்கு ரூ.28 உயர்ந்து ரூ.5,178க்கு விற்பனை ஆகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த மாதம் முழுவதும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டுபாடுகள் என்னென்ன??