Publish Date: Fri, 02 Nov 2018 (18:52 IST)
Updated Date: Fri, 02 Nov 2018 (18:58 IST)
தமிழகத்தில் அடிக்கொருமுறை போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய பற்றாக்குறைக்கும் போனஸ் வேண்டியும் போராடுவது வழக்கமாகியுள்ளது.
தற்போது மீண்டும் போராட்டத்தை அறிவித்திருந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டதாக அறிவித்துள்ளன.
மேலும் 12 தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்குப் பிறகு போராட்ட இந்த அறிப்பு திரும்பப் பெறப்பட்டது. அதனால் பொதுநலனை கருத்தில் கொண்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு போக்குவரத்து சம்பந்தமாக எந்த கஷ்டமும் நேராது என்றே தோன்றுகிறது.