Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைக்கிள் இல்ல தென்னந்தோப்ப வச்சிகோ.. ஓகே சொன்ன ஜி.கே.!

சைக்கிள் இல்ல தென்னந்தோப்ப வச்சிகோ.. ஓகே சொன்ன ஜி.கே.!
, புதன், 18 டிசம்பர் 2019 (13:14 IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். 

 
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.    
 
அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. 
 
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம். 
 
சைக்கிள் சின்னத்தை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பெற்றுவிடுவார் என எதிர்பார்த்த அவரது கட்சி நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்தாலும்,  ஊரகப்பகுதியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த சின்னம் கைகொடுக்கும் என நிர்வாகிகள் எதிர்ப்பார்த்தும் உள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியுரிமை சட்டம்: மீண்டும் போராட்டத்தை அறிவித்த திமுக!