காதலி வேறு ஒருவருடன் ஓட்டம்? ஆற்றில் குதித்த ஆட்டோ டிரைவர்! – சென்னையில் அதிர்ச்சி

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (10:03 IST)
சென்னையில் காதலி வேறு ஒருவருடன் சென்று விட்டதால் ஆட்டோ டிரைவர் கூவம் ஆற்றில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் 49 வயதான பாலாஜி என்பவர். ஆட்டோ டிரைவராக இருந்து வரும் பாலாஜி அப்பகுதியில் சித்ரா என்ற பெண்ணுடன் பல காலமாக திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சித்ராவுக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பாலாஜிக்கு தெரியாமல் அந்த நபருடன் சித்ரா சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில காலமாகவே மன விரக்தியில் இருந்த பாலாஜி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகர் போலீஸ் பூத் பின்புறம் உள்ள கூவம் ஆற்றில் இறந்து மிதந்த பாலாஜியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments