Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: பள்ளி மீது பொதுமக்கள் கல்வீச்சு!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: பள்ளி மீது பொதுமக்கள் கல்வீச்சு!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (12:05 IST)
ஈரோட்டில் பள்ளி மாணவி ஒருவருக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆத்திராமடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.


 
 
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பூதப்பாடியில் உயர்நிலை பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார் அந்த சம்பந்தப்பட்ட மாணவி. இவரிடம் உடற்கல்வி ஆசிரியர் தவறாக நடந்து வந்துள்ளார். ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை தருவதை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்த அந்த மணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
 
தற்கொலைக்கு முயன்ற மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர்களிடம் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார் அந்த மாணவி. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்களும் அந்த பகுதி மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு அந்த ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்க முறையிட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் பதில் ஏதும் கூறாததால் பள்ளி மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்