Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7-ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: கரும்பு தோட்டத்தில் சிறுமி கொன்று புதைப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (09:53 IST)
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே 7-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கரும்பு தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


 
 
மாலை பள்ளி முடிந்ததும் தனது தாயுடன் வயலுக்கு சென்றுள்ளார் மாணவி உஷாராணி. அப்போது கோவில் அருகே சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்ததும் தான் இங்கு விளையாடுவதாகவும் நீங்கள் வயலுக்கு போகுமாறு கூறியுள்ளார் அவர்.
 
உஷாராணியை அங்கு விட்டுவிட்டு வயலுக்கு சென்றார் அவரது தாய். பின்னர் வயலில் இருந்து வீட்டுக்கு வந்தபோது உஷாராணி இன்னமும் வீட்டுக்கு வராததை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் பல இடங்களில் அவரை தேடினார்.
 
நேற்று காலை கரும்பு தோட்டத்தில் உள்ள பள்ளத்தில் மண்மேடு இருப்பதை பார்த்த வயலுக்கு சென்றவர்கள் அதனை குச்சியால் கிண்டி பார்த்தபோது அதில் மாணவி உஷாராணி கொலை செய்யப்பட்டு புதைக்கப்படிருப்பது தெரியவந்தது.
 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், மாணவி உஷாராணி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments