Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் இளம்பெண்ணின் உயிரை குடித்த செல்போன்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 31 மே 2018 (08:31 IST)
பெரும்பாலானோர் தூங்கும்போது செல்போனை அருகில் வைத்து கொண்டே தூங்கும் பழக்கத்தை உடையவர்களாக இருக்கின்றனர். இதனால் சில சமயம் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை கூட ஏற்படுகிறது. அந்த வகையில் வேலூர் அருகே மார்பு அருகே செல்போனை வைத்து தூங்கிய இளம்பெண் இடிதாக்கியதால் மரணம் அடைந்தார்.
 
வேலூர் மாவட்டம் திருவலம் என்ற பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது வீரலட்சுமி என்ற இளம்பெண் செல்போனை தனது மார்பு அருகே வைத்துபடி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள தென்னைமரத்தை தாக்கிய பயங்கர இடி வீரலட்சுமி வைத்திருந்த செல்போனையும் தாக்கியுள்ளது. இதனால் வீரலட்சுமியின் மார்பு பகுதி கருகியது
 
இந்த எதிர்பாராத விபத்தில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட காவல் துறையினர் வீரலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
தூங்கும்போது எப்போதும் செல்போனை ஒருசில அடி தூரம் வைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற விபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments