Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட்சியில் இருந்து நீக்கினாலும் தேசத்திற்காக உழைப்பேன்: காயத்ரி ரகுராம் ட்வீட்

Gayathri
, செவ்வாய், 22 நவம்பர் 2022 (13:19 IST)
கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தேசத்திற்காக உழைப்பேன் என நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சற்று முன்னர் நடிகை காயத்ரி ரகுராம் ஆறு மாத காலத்திற்கு கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஆறுமாதக் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
 
 இந்தநிலையில் அண்ணாமலையின் முடிவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் இருப்பினும் தான் தேசத்திற்காக தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். 
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை: சூர்யா சிவாவுக்கு அண்ணாமலை உத்தரவு