Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து: நேரில் ஆறுதல் கூறிய நடிகை கவுதமி!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:13 IST)
சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து: நேரில் ஆறுதல் கூறிய நடிகை கவுதமி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இயங்கிவந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது சோகமான சம்பவமாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ,காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை கௌதமி பட்டாசு விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார். இது குறித்த புகைப்படங்களுடன் கூடிய பதிவை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அச்சங்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிவகாசி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். மேலும் அவர்கள் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். 
 
உயிர் இழந்த தொழிலாளர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்கவும் தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கவும் உடனடியாக ஒப்புதல் அளித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments