Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 19 மே 2022 (07:14 IST)
ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒன்றாம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இந்த நிலையில் ஒரே மாதத்தில் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 1018 ரூபாய் 50 காசு என சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களும் விலை ஏறி வரும் நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமன்றி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2507 ரூபாய் என விற்பனை செய்து வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments