பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

Mahendran
ஞாயிறு, 18 மே 2025 (16:10 IST)
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே 34 வயது பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பொள்ளாச்சி பாலியல் வழக்குத் தீர்ப்பு வெளியாகிய அதே நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், அரசுக்கு எதிரான பரபரப்பை தவிர்க்கவே போலீசார் இதை வெளியிடாமல் மூடி வைத்ததாக கூறப்படுகிறது.
 
பாதிக்கப்பட்ட பெண் கும்பகோணத்தில் உள்ள சிமென்ட் கடையில் பணியாற்றி வந்தார். அதே கடையில் பணியாற்றிய சண்முகபிரபு, பாஸ்கர், பிரகதீஸ்வரன்  ஆகியோர் மே 12ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்பிய அந்த பெண்ணை பின் தொடர்ந்தனர். பின்னர், உமாமகேஸ்வரபுரம் பகுதியில் அமைதியான இடத்திற்கு இழுத்துச் சென்று, அங்கு காத்திருந்த சரவணன்  என்பவருடன் சேர்ந்து, அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர். சம்பவத்தை வீடியோவும் எடுத்தனர்.
 
பின்னர் அவரை மிரட்டி வெளியில் எதையும் பேச வேண்டாம் எனக் கூறினர். மன உளைச்சலுடன் இருப்பதைக் கண்டு, அவருடைய சகோதரர்களிடம் அவர் நிகழ்ந்ததை பகிர்ந்துள்ளார். மே 13ஆம் தேதி, அவர் ஆடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்த விவகாரம் இப்போது தான் வெளியானது,  போலீசாரின் தகவல் மறைப்பு மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் தான் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்