Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமெடுத்த கஜா புயல்: நாளை மாலை என்ன நடக்கும்?

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (18:18 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நேற்று திசைமாரிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
நேற்று மற்றும் இன்று தனது வேகத்தில் சற்று தளர்ந்த கஜா புயல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலும், புதுச்சேரியின், காரைக்கால் மாவட்டத்திலும் நாளை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்த வரை, நாளை காலை முதல், மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments