Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை முழுமுடக்கம் நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (16:11 IST)
மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மக்களை கொரொனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரொனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

வரும் ஜூலை 30 வரை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் முழு ஊரங்கு உள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அவர் உத்தவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments