Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் சென்னையில் மளிகை பொருட்கள் விற்பனைக்கு அனுமதி!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (07:17 IST)
நாளை முதல் சென்னையில் உள்ள மளிகை கடைக்காரர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து வாகனங்களில் சென்று டெலிவரி செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மே 31 முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
மளிகை கடைகளை திறக்கக் கூடாது என்றாலும் கடைகளில் உள்ள பொருள்களை எடுத்து வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யலாம் என்றும் ஆன்லைன் மூலம் எடுத்த ஆர்டர்களை பொது மக்களுக்கு வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் பெரிய கடைக்காரர்கள் மொத்த கடைக்காரர்கள் வியாபாரிகளுக்கு குடோன்களில் இருந்து பொருள்கள் எடுத்து வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் வணிக வளாகங்களில் உள்ள மளிகை கடைக்காரர்களும் ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments