Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மூடப்படும் ரயில் நிலையம்.. போதுமான பயணிகள் இல்லை என அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 25 ஜனவரி 2024 (14:53 IST)
போதுமான பயணிகள் வரவில்லை என்பதால் தமிழகத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தை மூடப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள கரூர் சேலம் வழித்தடத்தில் வாங்கல் என்ற ரயில் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.  இந்த ரயில் நிலையம் இன்று முதல் அதாவது ஜனவரி 25ஆம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ரயில் நிலையத்தில் போதிய பயணிகள் இல்லை என்றும் அதன் காரணமாக இந்த ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. எனவே இன்று முதல் இந்த ரயில் நிலையத்தில் எந்த ரயிலும் நிற்காது என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதுமட்டுமின்றி பயணிகளுக்கு இந்த ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கப்படாது என்றும்  ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments