Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் வேட்புமனு தாக்கல்: அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (07:39 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 19-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் சனி ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் 3 மணி வரை ஃபேட் மனுவை தாக்கல் செய்யலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பொதுத் தொகுதியில் போட்டியிடுபவர்கள் ரூபாய் பத்தாயிரம் டெபாசிட் கட்ட வேண்டுமென்றும் எஸ்சி எஸ்டி வேட்பாளர்களை 5,000 டெபாசிட் கட்ட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதுமட்டுமின்றி வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் இருவர் மட்டுமே வருவதற்கு அனுமதிக்கப்படும் என்றும் மாஸ்க் அணிந்து கொரோனா விதி முறைகளை கடைபிடித்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று முதல் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மார்ச் 20ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும் 22ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தினம் என்றும் அன்று மாலையே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியாகும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments