Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நள்ளிரவு முதல் பேருந்துகள் ஓடாது: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Mahendran
திங்கள், 8 ஜனவரி 2024 (14:44 IST)
அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை முதல் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பில் நாளை முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்க  சங்க நிர்வாகிகள் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது என்றும்  அறிவித்துள்ளனர்.
 
சிஐடியு சௌந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11:59 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்தும் ஓடாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
 நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் நாளை காலை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பினரும் உறுதியாக உள்ளனர் என்றும்  கண்டிப்பாக எங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments