Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (07:39 IST)
வடகிழக்கு பருவமழை ஏற்கனவே தீவிரமடைந்த நிலையில் இடையில் சில நாட்கள் மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
குறிப்பாக சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, வடபழனி, கிண்டி, மேற்கு மாம்பலம், அசோக் நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பரவலான மழை பெய்து வருகிறது 
 
மேலும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை, உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மேலும் சென்னையில் ஒரு சில நாட்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் மழை பெய்து உள்ளதை அடுத்து சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் வெளியில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments