Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது எப்போது?

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (20:51 IST)
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை மறைந்தார் என்ற செய்தியை கேட்டு கோடிக்கணக்கான திமுக தொண்டர்கள் மீளாத்துயரில் உள்ளனர். தங்கள் தலைவரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க சென்னையில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நாளை அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்படும் என்றும், அதன்பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதற்கு முன்னர் கருணாநிதிக்கு குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையும், சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரையும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments