Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”யார் பெரிய ரவுடி?” என்ற தகராறில் நண்பனை கொன்ற வாலிபர்கள்

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (14:22 IST)
சென்னையில் தன்னுள் யார் பெரிய ரவுடி என்ற தகராறில் தனது நண்பனை, சக நண்பர்கள் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கடந்த ஆண்டு போலீஸ்காரர் ஒருவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்தவர். இவர் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.

இந்நிலையில், ரஞ்சித் சென்னை நெற்குன்றம் பகுதியில், தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து விசாரனை நடத்தியதில் கொலை குறித்த உண்மை தெரியவந்தது.

சம்பவ தினத்தன்று ரஞ்சித் உள்ளிட்ட 7 பேர் மது அருந்திகொண்டிருந்த போது, போதையில் ரஞ்சித், தான் போலீஸையே கொலை செய்தவன், நான் தான் பெரிய ரவுடி, உங்களால் என்னை போல் ரவுடியாக முடியாது என்று கூறியுள்ளார். இதனால் யார் பெரிய ரவுடி? என்பதில் அவர்களுக்குள்ளே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் மிகவும் கோபமடைந்த ரஞ்சித்தின் நண்பர்கள், ரஞ்சித்தை சரமாரியாக தாக்கி, பாட்டிலால் குத்தி, கல்லை தலையில் தூக்கி போட்டு கொலை செய்துள்ளனர்.

இந்த கொலையை செய்த ரஞ்சித்தின் நண்பர்களை போலீஸார் தேடி வந்த நிலையில், ஜோசப் மற்றும் ஆனஸ்ட்ராஜ் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments