நவம்பர் மாதம் வரை ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி விநியோகம் - தமிழக அரசு

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (13:51 IST)
தமிழகத்தில் கொரொனாவால் மக்கள் பாதிக்காத வண்ணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு துரிதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆயினும் நாள்தோறும் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்றில் இருந்து சென்னையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சாலையில் செல்வதைப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்டது போன்று வரும் நவம்பர் மாதம் வரை விலையில்லாமல் அரிசி  வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும்,  அனைத்து அரிசி அட்டை வைத்துள்ளோர்களுக்கும் வரும் நம்பவர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் எனவும், பருப்பு, சமையல், எண்ணெய் போன்ற பொருட்களை அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக ஜூலை மாதம் ரேசனில் விலை கொடுத்து வாங்கியவர்கள் ஆகஸ்ட் மாதம் பொருட்களை இலவசமாக  வாங்கி ஈடு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளியை முந்திக் கொண்டு வரும் பருவமழை! - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

4 மாவட்டங்களுக்கு காத்திருக்கிறது மழை! வானிலை ஆய்வு மையம்!

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments