Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகங்களில் 2 நாட்களுக்கு இலவச உணவு! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Prasanth Karthick
புதன், 16 அக்டோபர் 2024 (10:28 IST)

சென்னையில் நேற்று கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 நாட்களுக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் அதீத மழைப்பொழிவு இருக்காது எனக் கூறப்படுகிறது.

 

பல பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் மழைநீர் வீடுகளில் புகுந்ததால் மக்கள் வெளியேறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் மக்களுக்கு உதவும் வகையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments