Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (21:18 IST)
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இன்றுடன் கால அவகாசம் நிறைவடையும் நிலையில், ஊரடங்கை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
 
இதன்படி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை ஏற்றம் தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்காக இணைய சேர்க்கை வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது 
 
மேற்காணும் திட்டத்தில் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேதி வரை 73,086 விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டுள்ளன
 
தற்போது கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தை கருத்தில் கொண்டு இணைய வழியில் விண்ணப்பித்தல் செய்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments