Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை...

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (18:51 IST)
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை டெல்லி பாட்டியாலயா நீதிமன்றம் விதித்துள்ளது. 
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளை வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய சிறை நிர்வாகம் போதிய ஆவணங்களைத் தர மறுப்பதாக குற்றவாளிகளில் இருவரான அக்சய்குமார் சிங், பவன்குமார் சிங் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
 
அந்த மனுவில், குற்றவாளிகள் தூக்கு தண்டனையை எதிர்த்து முறையீடு செய்வதற்காக சட்ட வழிமுறைகள் இதுவரை முடியவில்லை. ஜனதிபாதிபதிக்கு வினய்குமாரின் கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்சய் குமார் மற்றும் பவன் குப்தா இருவரும் கருணை மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் சட்ட வழிமுறைகள் நிறைவடையும் முன் தூக்கில் இடக் கூடாது என  அந்த மனுவில் தெரிவித்திருந்தது.
 
இதனையடுத்து, நீதிபதி தர்மேந்தர் ரானா,  நிர்பயா குற்றவாளிகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனை விதிப்பதற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் துக்குதண்டனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்