Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு: மேலும் 4 பேர் அதிரடி கைது

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (19:21 IST)
குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ஏற்கனவே ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கைது செய்யப்பட்டவர்கள் சென்னையை சேர்ந்த தீபக், செய்யாறை சேர்ந்த வினோத்குமார், கூடங்குளத்தை சேர்ந்த அருண்பாலாஜி மற்றும் தேவி என தகவல் வெளிவந்துள்ளது. இந்த நால்வரின் கைதை அடுத்து குரூப் 2ஏ தேர்வில் இதுவரை 14 பேர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நால்வரிடம் நடத்திய விசாரணையில் ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் என தெரிய வந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் கைது நடவடிக்கை தொடரும் என்றும், தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது என்றும் போலீசார்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments