Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை-செந்தில் விவாதத்தை நடத்த தயார்: 4 சேனல்கள் போட்டி!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:08 IST)
அண்ணாமலை-செந்தில் விவாதத்தை நடத்த தயார்: 4 சேனல்கள் போட்டி!
சமீபத்தில் அண்ணாமலை அவர்கள் பாஜகவை குற்றச்சாட்டும் திமுகவை சேர்ந்தவர்கள் யாராவது தன்னுடன் விவாதிக்க தயாரா என சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் ஏற்றுக்கொண்டு அண்ணாமலை உடன் விவாதம் செய்த தயார் என்று அறிவித்தார் 
 
இதனை அடுத்து தற்போது அண்ணாமலை மற்றும் டாக்டர் செந்தில்குமார் விவாதத்தை நேரடியாக ஒளிபரப்ப நாங்கள் தயார் என நான்கு முன்னணி சேனல்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனை டாக்டர் செந்தில்குமாரும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
 
இந்த நான்கு சேனல்களில் ஒன்றை அண்ணாமலை மற்றும் செந்தில்குமார் ஆகியோர் இணைந்து தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஒரு முன்னணி சேனலில் இருந்து விலகி சென்று தனியாக யூடியூப் சேனலை நடத்தி வரும் ஊடகவியலார் செந்தில் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை-செந்தில் இருவரும் விரும்பினால் நேர்காணல் நடத்த தயார் என்று அறிவித்துள்ளார் 
 
இன்னும் ஓரிரு நாட்களில் அண்ணாமலை மற்றும் செந்தில்குமார் விவாதம் நடத்தும் தொலைக்காட்சி எது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments