Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 'பார்முலா 4 கார் ரேஸிங்'- டிக்கெட்டுகளை வெளிட்ட அமைச்சர் உதயநிதி

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (19:06 IST)
சென்னையில் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயத்திற்கான டிக்கெட்டுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி  இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4  நடைபெறவுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்  தெரிவித்துள்ளதாவது:

‘’சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4 போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை - காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.

மேலும், இந்தப் போட்டிக்கான டிக்கெட்-ஐ இன்று அறிமுகம் செய்தோம். இச்சிறப்புக்குரிய போட்டிக்கான பாதுகாப்பு - அடிப்படை வசதிகள் - மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். இந்தியாவிலேயே முதன்முறையாக நடைபெறும் இந்த சிறப்புக்குரிய போட்டியின் வெற்றியின் மூலம் புது வரலாறு படைத்திடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments