Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

Mahendran
திங்கள், 2 ஜூன் 2025 (13:31 IST)
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகருக்கு, 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை என்பது வரவேற்கக்கூடியது தான். ஆனால், பெண்களிடம் சொன்னால் 'தூக்கு தண்டனை கொடுங்கள்' என்று தான் சொல்வார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். குறிப்பாக, சாகும்வரை ஆழ்ந்த தண்டனை பெற வேண்டும் அல்லது தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இது மக்களின் கருத்து," என்று தெரிவித்தார்.
 
"குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க கூடாது என்றும், ஞானசேகருக்கு 30 ஆண்டுகள் தண்டனை சரிதான் என்றும். ஆனால் அதே நேரத்தில், அவருக்கு உதவி செய்தவர்கள் யார்? அவரது குற்றத்தின் பின்னால் யார் யார் இருக்கின்றனர்? யார் அந்த சார் என்பதற்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.
 
"நீதிமன்றத்தின் தீர்ப்பை எல்லாம் தங்கள் சாதனையாக திமுக சொல்லிக் கொள்கிறது" என்றும், "அவர்கள் கூறும் மாதிரி பார்த்தால், வேங்கை வயல் பிரச்சனையில் இன்னும் ஏன் தீர்வு கிடைக்கவில்லை?" என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்