Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக முன்னாள் எம்.பி குற்றவாளி என தீர்ப்பு ! சிறப்பு நீதிமன்றம் அதிரடி !

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (14:09 IST)
அதிமுக முன்னாள் எம்.பி குற்றவாளி என தீர்ப்பு ! சிறப்பு நீதிமன்றம் அதிரடி !

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம்  அறிவித்துள்ளது. 
 
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி எம்.பியாக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன் ஆவார். 
 
இவர் தனது கல்லூரி விரிவாக்கத்துக்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்றதில் மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டது.
 
இதுகுறித்த வழக்கில் எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று, அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம்  அறிவித்துள்ளது. 
 
கடன் மோசடி வழக்கில்  எம்.பி எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. முன்னாள் எம்.பி உள்ளிட்ட 3 பேருக்கான தண்டனை விவரத்தை பிற்பகல் 3 மணிக்கு நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments