Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன் தண்ணீர் விற்பனையாளர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்! மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (13:51 IST)
தமிழகத்தில் அனுமதி பெறாத குடிநீர் ஆலைகளை முடியதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழகம் முழுவதும் முறையான அனுமதி பெறாமல் இயங்கும் குடிநீர் ஆலைகளை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேன் தண்ணீர் விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதனால் குடிப்பதற்கு கேன் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பல இடங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அனுமதி பெறாமல் இயங்கிய ஆலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அரசின் அனுமதி கிடைத்தப்பின் சீல் வைக்கப்பட்ட ஆலைகள் மீண்டும் இயங்க தொடங்கலாம் என்றும், அனுமதி அளிப்பதற்கான பணிகளை 15 நாட்களுக்கு செய்யுமாறும் கூறியுள்ளதால் கேன் குடிநீர் முகவர்கள், விற்பன்னர்கள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். இதனால் வழக்கம் போல அனைத்து பகுதிகளில் கேன் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments