Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் ரெய்டு: அதிமுகவினர் பரபரப்பு

Advertiesment
எஸ்பி வேலுமணி
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (07:22 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கோவை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித் துறையினர் ரெய்டு செய்து வருகின்றனர்
 
இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடப்பதாக வந்த தகவலை அடுத்து அதிமுகவினர் அவரது வீட்டின்  முன் குவிந்துள்ளனர்
 
இதனை அடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இந்த சோதனையை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20.40 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!