வங்கக்கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு.. கரையை கடப்பது எப்போது? எங்கே?

Siva
திங்கள், 21 அக்டோபர் 2024 (11:10 IST)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் இன்று உருவாகும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு உருவாகி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதையடுத்து அக்டோபர் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், நாளை இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் தமிழக கடற்கரையை விட்டு விலகி இருப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்வதாகவும், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் இந்த புயல் அக்டோபர் 23ஆம் தேதி ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

"டானா" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் மட்டும் ஓரளவு மழை பெய்யும் என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments