Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவானது புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை..!

Mahendran
சனி, 14 டிசம்பர் 2024 (11:45 IST)
டிசம்பர் 15ஆம் தேதிக்குள் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடலில் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மன்னார்குடி வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை உருவானதாகவும் இதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து டிசம்பர் 17ஆம் தேதிக்கு தமிழகத்தில் ஆரஞ்சு கலர் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் டிசம்பர் 17ஆம் தேதி 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை தமிழகத்தின் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மிக கனமழை எச்சரிக்கையும் இந்திய மாநில ஆய்வு மையம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments