Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தை பௌர்ணமி; சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி! – பக்தர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (09:00 IST)
தை பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சுந்தரமகாலிங்க சுவாமி மலைக்கோவில் புகழ்பெற்ற சிவன் ஸ்தலமாகும். மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் சிவராத்திரி சமயங்களில் இந்த மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை பிப்ரவரி 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

மலையேறும் பக்தர்கள் நீரோடைகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் இரவில் மலை பகுதிகளில் தங்குவதற்கும் அனுமதி இல்லை எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments