Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்குவோம்: ஃபோர்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Mahendran
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (13:51 IST)
தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் ஏற்றுமதிக்கான கார் உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனவும் ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால் இது குறித்து கருத்து கூறியுள்ள நெட்டிசன்கள் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே ஃபோர்டு நிறுவனம் அறிவித்து விட்டதாகவும் தற்போது முதல்வர் சென்றபோதுதான் முதல்வரின் வேண்டுகோளுக்காக தான் கார் உற்பத்தி தொடங்கப்போவதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments