Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் அதிமுக சார்பில் அன்னதானம்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (22:25 IST)
கரூரில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத நான்காவது  சனிக்கிழமையான இன்று  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமையான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்களுடன் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான திரு எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் அமைக்க பட்டிருந்த அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்கி பக்தர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்