Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க.. அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை!

Webdunia
சனி, 22 மே 2021 (09:16 IST)
அமலில் இருக்கும் இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஊடகவியலாளர்கள் அதாவது மீடியாக்களில் பணிபுரிபவர்களுக்கு இ-பதிவு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.
 
எனவே, இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து உணவு டெலிவரி ஊழியர்கள் வைத்துள்ள கோரிக்கையில், கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான நிலையில் இ-பதிவு கட்டாயம் என்பதால் குறித்த நேரத்தில் உணவுகளை டெலிவரி செய்ய முடியவில்லை. 
 
எனவே எங்களுக்கு இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஸ்விக்கி, ஜோமோட்டோ ஊழியர்கள் அரசுக்கு வைத்த தங்கள் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments